புதன், 26 டிசம்பர், 2012

பிரிவு வாழ்க!


இனியவளே!
தொலைந்த
இதயத்தை
தேடினேன்;
தேடினேன்;
உன்னிடம்
தொலைந்த
என்னையும்
சேர்த்துதான்...!
இதயம் மட்டும்
உன் வீட்டு வாசலில்
விழுந்து கிடக்க,
நான் மட்டும்
என் வீட்டில்!
நம்மை பிரியாத
பிரிவு வாழ்க!!!

ஆசைகள் பலவிதம்


இனியவளே!
காதலர்கள்
ஆசைப்பட்டதால்
மனங்கள்
ஒன்றானது...!
பெற்றோர்கள்
ஆசைப்பட்டதால்
திருமணங்கள்
இரண்டானது...!

திங்கள், 24 டிசம்பர், 2012

பெற்றோரின் ஆசை


இனியவளே!
இந்திய திரு நாட்டில்
இந்த காலக்கட்டத்தில்
புதிய
காவியங்களை
உருவாக்குவதற்கு
காதலித்த
காதலனுக்கும்
காதலிக்கும்
திருமணமாம்
வேறு வேறு மண்டபங்களில்...!
பெற்றோர்கள்
ஆசைப்பட்டதால்...!

கல்யாண மாலை


இனியவளே!
காதலிக்கும் பொழுது
காதலி
தரும்
புன்னகை பூக்களை
உதிர்த்து விட்டு
அவள்
ஏமாற்றியவுடன்
காதலனின்
கண்ணீர் பூக்களை
மாலையாக
அணிந்து
காதலி
மண மேடையில்!!!

கூடு விட்டு கூடு


இனியவளே!
உன் இதயத்தை
நானும்
என்
இதயத்தை
நீயும்
மாற்றிக் கொள்வதை
பார்த்து விட்டுதான்
கூடு விட்டு கூடு
பாயும் முறையை
ஆராய்கிறார்களோ!

வெள்ளி, 21 டிசம்பர், 2012

பிடிவாதம்


இனியவளே!
இதய விளக்கில்
கண்ணீரை
எண்ணெயாகக் கொண்டு
காதல் ரோஜா
உள்ளே எரியுது;
மௌன உதடும்
வெளியே
சிரித்து நடிக்குது;
நம் காதலை
உன் மனமோ
ஏனோ மறைக்குது!!!