இனியவளே!
தொலைந்த
இதயத்தை
தேடினேன்;
தேடினேன்;
உன்னிடம்
தொலைந்த
என்னையும்
சேர்த்துதான்...!
இதயம் மட்டும்
உன் வீட்டு வாசலில்
விழுந்து கிடக்க,
நான் மட்டும்
என் வீட்டில்!
நம்மை பிரியாத
பிரிவு வாழ்க!!!
இனியவளே!
இந்திய திரு நாட்டில்
இந்த காலக்கட்டத்தில்
புதிய
காவியங்களை
உருவாக்குவதற்கு
காதலித்த
காதலனுக்கும்
காதலிக்கும்
திருமணமாம்
வேறு வேறு மண்டபங்களில்...!
பெற்றோர்கள்
ஆசைப்பட்டதால்...!
இனியவளே!
காதலிக்கும் பொழுது
காதலி
தரும்
புன்னகை பூக்களை
உதிர்த்து விட்டு
அவள்
ஏமாற்றியவுடன்
காதலனின்
கண்ணீர் பூக்களை
மாலையாக
அணிந்து
காதலி
மண மேடையில்!!!