செவ்வாய், 5 மார்ச், 2013

மறக்காதே!

இனியவளே!
உன்னை
தாஜ்மகால்
கட்ட சொல்லவில்லை...
ஆனால்
அணுவாக
உன்னிதயத்தில்
உள்ள
என்னை
மறக்காதே!
நினைப்பதற்க்காக;


தொடக்கவுரை

இனியவளே!
இனி
புரட்டப்படும்
பக்கங்கள்
ஒவ்வொன்றும்
உன்
நினைவு முத்தங்கள்!
நீ
கொடுத்த
முத்தத்தின்
எச்சில் காய்ந்தாலும்
உன்
நினைவு தேயவில்லை...
இதோ
காதல் கிறுக்கல்கள்.... 


வியாழன், 14 பிப்ரவரி, 2013

கடிகாரம்


இனியவளே!
வாழத்தான் பிடிக்குமா
உன்னை
பிரிந்த நாட்களில்...
கடிகாரத்தையும்
மறந்து போனேன்;
கடிகாரம் எழுதும்
மணிக்கணக்கையும்
மறந்து போனேன்
நீ
என்னுடன்
இருந்த
வேளையில்...!
இன்றோ
என் கடிகாரம் மட்டும்
கணக்கை மறந்து விட்டதா!
நேரமும்
மாறவில்லை
பொழுதும்
விடிய வில்லை
நீ இல்லாமல்!!!

கையெழுத்து



இனியவளே!
திரும்ப திரும்ப
படித்தேன்
உன் கையெழுத்தை!
மாறி விட்டது
என்
தலையெழுத்து!!!