வியாழன், 15 செப்டம்பர், 2011
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
வேதனை
இனியவளே!
ஒரு
மணி நேரம்
உனை பார்க்காமல்
மணிக் கணக்கில்
இறைவனிடம்
மன்றாடினேன்...!
ஒரு
நாள்
உனை பார்க்காமல்
பார்க்காத
நாளே
வேண்டாமென்று
விண்ணப்பித்தேன்...!
இனி
நீயே
இல்லையென்றால்
உயிரே வேண்டாம்
என்று
கண்டிப்பேன்...!
---------------------------------------------------
காதலி - தனிமை + காதல் = வேதனை
---------------------------------------------------
பச்சை மர ஆணி
இனியவளே!
நாம்
காதலித்த நாட்கள்
செல்லரித்து போக...
உன்னை
வர்ணித்த கவிதையில்
சொற்கள் பிரிந்து விழ...
நீ
உதடு சேர்த்து கொடுத்த
முத்தம் காய்ந்து போக....
நீ
தொட்ட இடங்களில்
வியர்வை வந்து அழிக்க...
நாம்
சந்தித்த நாட்கள் எல்லாம்
சத்தமில்லாமல் மறைய...
நீ
காதலித்த
என்னை
மணிக்கணக்கில் மறந்து போக...
ஆனால்
பச்சை மர ஆணி போல்
மனதில்
பதிந்த
உன் நினைவு மட்டும்
இன்னும் மறையாமல்....
சனி, 3 செப்டம்பர், 2011
வாழ்த்து
இனியவளே!
மார்ச் 14 [என் பிறந்த நாள்]
அமைதியை
கலைக்கும்
நோக்கத்துடன்
சுற்றும்
சூரியன்
தன் கதிரால்
வாழ்த்து சொல்ல...
ஆர்ப்பரிக்கும்
புல்லினங்கள்
ஆரவாரத்துடன்
வாழ்த்து சொல்ல...
இனிய பொழுதில்
இனிப்புடன்
மற்றவர்
வாழ்த்து சொல்ல...
ரோஜா மொட்டு
மலர்ந்து
மெல்லிசையுடன்
வாழ்த்து சொல்ல...
தென்றலும்
தேகத்தை உரசி
வாழ்த்து சொல்ல...
நம்பியிருக்கும்
நட்பும்
நன்றியுடன்
வாழ்த்து சொல்ல...
எதிர்ப்பார்த்தேன்
இதயத்தை
கொடுத்த
உன் வாழ்த்தை...!
அலட்சியம்
இனியவளே!
காலை
கதிரவன்
தன் விளையாட்டை
ஆரம்பித்த பொழுது,
அவனும்
திடுக்கிட்டுப் பார்க்க,
வெண்ணிலவு
வெட்க்கப் பட வந்த
புது நிலவாக
நீ
என்னை
அணைத்து
முத்தம் பதித்த நொடியும்;
மாலை கதிரவன்
ஓய்வுக்கு செல்லும் பொழுது,
மாலையை
மயக்க
மல்லிகை மலரும் பொழுது,
வசந்த பெண்ணிலவு
உன் மடியில்
நான்
தலை சாய்ந்த நொடியும்;
கனவாக
தோன்றியது
நீ
என்னை
அலட்சியமாக
மறந்த நொடியில்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)