வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

காதல் தோல்வி

இனியவளே!
காலை
கதிரவன்
கண் விழிக்கும்
முன்னே
காளையவன்
கண் விழிக்க...
சொந்தம்
கொண்ட
தென்றல்
இல்லாத
சோக சோலையிலும்
அவன்
மோகத்தில் இருக்க...
எதுகையும்
எதார்த்தமாக
மோனையும்
மொத்தத்தில்
அவன்
கவிதைகளில் இருக்க...
ஆனால்
கட்டும்
புடவையாக
காதலை
(ஏ)மாற்றும்
காதலிகள் இருக்க...
உலகம்
நிற்கும் வரை
காதல்
தோல்விகள் இருக்கும்! 


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

புது வரலாறு

இனியவளே!
அணு அணுவாய்
அழிந்து
ஆழமாய்
காதலித்த
அம்பிகாவதி -அமராவதி...
மணிக்கணக்கில்
காதலித்து
மந்திரிக்கப் பட்டவர்களாய்
காதலித்த
லைலா-மஜ்னு...
சந்தித்த வேளையிலும்
காதல் செய்து
சடலங்களாகியும்
காதலித்த
சலீம்-அனார்க்கிளி...
என்று
தோல்வி கண்ட
வழிகாட்டிகளும் இருக்க,
பெண்ணுக்கு
அலட்சியம்
தேசிய குணம்
என்று தெரிந்தே
காதலித்தேன்
வரலாற்றில்
இடம் பிடிக்க...! 


சுடிதார் நிலவு

சடலங்களை போல
இருக்கும்
மரங்களை
உயிர்ப்பிக்க
தென்றல்
வரும் வேளையில்
மேகப் புடவை
தேவையில்லை என்று
அலட்சியமாக
வீதியில் இறங்கி
சுடிதார் அணிந்து வந்த
நிலவாக
உன்னை
பார்த்த பொழுது
களவாடப்பட்டேன்
உடன் பொழுதே
தற்காலிக பைத்தியமானேன்...!
காதல் கொண்டேன்....
காதலும் தோல்வியும்
ஒட்டி பிறந்தவர்கள்
என்று தெரியாமல்....!


வரம்

இனியவளே!
காதலியிடம்
காதலை
கூறும் போது
மறக்காமல்
மன உறுதியை இறைவனிடம்
கேள்...!
பழகிய பிறகு
அவள் தரும்
தோல்வியை
தாங்கி கொள்ள! 



திருநாள்

இனியவளே!
முப்பது நாட்கள்
தேடல்
விளையாட்டில்
சூரிய காதலனும்
நிலா காதலியும்
சேரும்
திருநாள் உண்டு
என்றால்
நானும் நீயும்
இணைவோம்...!
நிமிடங்கள்
வருடங்களாக மாறினாலும்; 



பயம்

இனியவளே!
ரோஜாவே! ரோஜாவே!
என்னை
முள்ளால்க் குத்தி
குருதியை
சாயமாக
பூசிக் கொள்ளாதே!
வெண்ணிலவே! வெண்ணிலவே!
என்னை
பள்ளத்தில் தள்ளி
நீ
மட்டும்
மேகத்தில் சுத்தாதே!
தென்றலே! தென்றலே!
என்னை
காதலால் சுட்டு
நீ மட்டும்
இதமாய் இருக்காதே!
இனியவளே! இனியவளே!
என்னை
அலட்சியமாக
மறந்து
ஏமாந்து போகாதே! 



இனியவள்

இனியவளே!
உன்னை
நிலவு
என்றால்
வெட்க்கப்பட்டு
காதலை மறைப்பாய்...
ரோஜா
என்றால்
கோபப்பட்டு
காதலை குத்துவாய்...
தென்றல்
என்றால்
புயலாய் புறப்பட்டு
காதலை அழிப்பாய்...
பெண்
என்றால்
அலட்சியப்பட்டு
காதலை மறப்பாய்...
இனியவள்
என்றால்
காதல் பட்டு
இனியவன் என்னை காதலிப்பாய்...! 


மறக்காதே!!!

இனியவளே!
சிரித்தாய்...!
இதயத்தை தொலைத்தேன்;
காதலித்தாய்...!
உலகை மறந்தேன்;
மறந்தால்
உயிரையும் துறப்பேன்!


முதன் முதலாய்

இனியவளே!
நான்
ரசித்த
முதல் சப்தம்,முதல் அமைதி,
முதல் பாடல்,முதல் கவிதை,
முதல் தினம்,முதல் சினம்,
முதல் மழை,முதல் அலை,
முதல் வானவில்,முதல் தென்றல்,
முதல் சூரியக்கதிர்,முதல் மோதல்,
முதல் நிலவொளி,முதல் இருட்டு,
முதல் படம்,முதல் பாடம்,
முதல் தேர்ச்சி,முதல் தோல்வி,
முதல் அழுகை,முதல் கவலை,
முதல் ஆனந்தம்,முதல் கோபம்,
முதல் இயற்கை,முதல் செயற்கை,
முதல் ஆலை,முதல் சோலை
நினைவேயில்லை....!
முதல் காதலையும்
அதை தந்த
உன்னையும் மறக்க முடியுமா?
என்
நினைவிருக்கும் வரை.....


சத்தியம்

இனியவளே!
நான்
பிறந்தவுடன்
கண் திறந்தேன்...
உன்னை
காதலித்தவுடன்
நினைவு மறந்தேன்...
நீ
மறந்தவுடன்
உயிர் துறப்பேன்...!


துணுக்குகள்

இனியவளே!
உன்னோட
மனசதான்
காற்றில் கரைச்ச....
இப்ப
என்னோட
காதலத்தான்
மனசுல மறைச்ச....
*உன்
திருமண நாள்;
என்
இறுதி நாள்!
*என்னோட
காதலி நீ
"மண்ணோடு போ" என்று
மறந்து விடுவாயோ?
என்னை!
என்னோட
மனசு
"கல்லாகி மாறி"
மறந்து விடுமா?
உன்னை! 



வியாழன், 11 ஆகஸ்ட், 2011

ஒப்பந்தம்

இனியவளே!
காதலுடன்
ஓர் 
ஒப்பந்தம்!
தோல்வி தரும்
காதல் விதையை
மனிதரில் 
தூவாதே என்று! 


தோல்வி

இனியவளே!
கண்ணால்
காதல் தந்தாய்!
காதலால்
கவிதை தந்தாய்!
பின்
எதனால்
தோல்வி தருவாய்!


புலம்பல்

இனியவளே!
பல நாட்கள்
பழகியது
ஒரு நாளும்
மறக்க வில்லை!
பழகாத
ஒரு நாளும்
பல நாட்க்கள்
ஞாபகமில்லை!
நித்தம்
ஒரு கவிதை தந்தாய்!
பித்தம்
தலைக்கேற காதல் தந்தாய்!
சத்தம்
இல்லாமல் என் சகாப்தம் அழித்தாய்!
உன் குரல்
நான்
தினமும் கேட்கும் இன்னிசையோ!
உன் முகம்
நான்
தினமும் கனவில் பார்க்கும் முகமோ!