வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
புது வரலாறு
இனியவளே!
அணு அணுவாய்
அழிந்து
ஆழமாய்
காதலித்த
அம்பிகாவதி -அமராவதி...
மணிக்கணக்கில்
காதலித்து
மந்திரிக்கப் பட்டவர்களாய்
காதலித்த
லைலா-மஜ்னு...
சந்தித்த வேளையிலும்
காதல் செய்து
சடலங்களாகியும்
காதலித்த
சலீம்-அனார்க்கிளி...
என்று
தோல்வி கண்ட
வழிகாட்டிகளும் இருக்க,
பெண்ணுக்கு
அலட்சியம்
தேசிய குணம்
என்று தெரிந்தே
காதலித்தேன்
வரலாற்றில்
இடம் பிடிக்க...!
முதன் முதலாய்
இனியவளே!
நான்
ரசித்த
முதல் சப்தம்,முதல் அமைதி,
முதல் பாடல்,முதல் கவிதை,
முதல் தினம்,முதல் சினம்,
முதல் மழை,முதல் அலை,
முதல் வானவில்,முதல் தென்றல்,
முதல் சூரியக்கதிர்,முதல் மோதல்,
முதல் நிலவொளி,முதல் இருட்டு,
முதல் படம்,முதல் பாடம்,
முதல் தேர்ச்சி,முதல் தோல்வி,
முதல் அழுகை,முதல் கவலை,
முதல் ஆனந்தம்,முதல் கோபம்,
முதல் இயற்கை,முதல் செயற்கை,
முதல் ஆலை,முதல் சோலை
நினைவேயில்லை....!
முதல் காதலையும்
அதை தந்த
உன்னையும் மறக்க முடியுமா?
என்
நினைவிருக்கும் வரை.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)