ஞாயிறு, 31 ஜூலை, 2011

மறக்காத நினைவு

இனியவளே!
வாழ்ந்தால்
உன்
அங்கமெல்லாம் உயிராக
மகிழ்ந்து வாழ்வது
இறந்தால்
நீ விட்ட மூச்சை
என் கடைசி மூச்சாய் உள்வாங்கி
உயிர் துறப்பது என்று
சத்தியம் செய்தப்படி
சிதைந்தது என் மனசு!
என் காதல் தேசக் கொடி போன்ற
உன்
கூந்தல் நீர்
படாமல்
வறண்டது என் இதயம்...!
உன்
முகங்கண்டு
வேகங்கொண்டு
காண வந்த போதும்
புது ஜனனம் கொண்டேன்;
உனை காணாதப் பொழுது
ஒரு மரணம் கண்டேன்!
உன்
நினைவு
வரும் பொழுதெல்லாம்
உயிர் சக்தியெல்லாம்
ஓரிடம் குவித்து
முயற்சியூட்டி முளை தூக்குது!
அது கவிதையாக வளருது;
ஆசையும் துறந்து போனேன்
அதிகாரத்தையும் மறந்து போனேன்
நீ என்றதும் பறந்து போவேன்
காதல் தேசத்திற்கு...!
மறக்காத நினைவு
துறக்காத உறவு
இதுவே என்
இனியவள்!
பனிக்குடம் உடைந்து
உலகம் வந்த நாள் முதல்
இதயம் பதிவு செய்த
நினைவுகள் அனைத்தும்
மரண படுக்கைக்கு சென்றாலும்
நீயும் நானும்
ரசித்த பொழுது ஒவ்வொன்றும்
என் மரணத்திலும்
இதயம்
மறக்காத நினைவுகள்!


ஞாயிறு விடுமுறை

இனியவளே!
ஞாயிறு விடுமுறை...!
நாளெல்லாம் நினைச்சு
மகிழ்ச்சி இல்லாட்டி
இருக்கவே இருக்கு
மனசு சொல்லும்
ஞாயிறு விடுமுறை!
வாழும் வாழ்க்கையும்
தூங்கி கிடக்கிறது;
ஞாயிறு என்று
வரும் பொழுதெல்லாம்
அது
விழித்துக் கொள்கிறது!
ஒவ்வோரு ஞாயிறு விடுமுறையின் போது
இருதயம் மகிழ்ந்து பிறக்கிறது!
ஆனால்
இன்றைய ஞாயிறு விடுமுறை....!
தடம் மாறி விட்டது;
நிலவைப் பார்க்காத சூரியனாக...!
பூவைக் காணாத தேனீயாக...!
தென்றலே இல்லாத சோலையாக...!
சோலை இன்று பாலைவனமாக!
ஆமாம்
உன்னை
பார்க்காத நாட்க்களில்
மரணம்
எனக்கு
படுக்கை தட்டி போடுகிறது;
ஆறாவது நாளின்
முடிவில்
மனதை ஆட்டி படைக்கும்
இனம் புரியாத
கவலை...!
உனைப் பார்க்காமல்....!
கடந்த
சில காலமாய்
இப்படியோரு கனவு...?
ஞாயிறு விடுமுறையே
இல்லை என்று;
ஞாயிறு அன்று
சாவென்றால் வருத்தமில்லை....!?
சாவின் அருகில்
நீ
இருந்தால் மகிழ்வேன்!
எல்லா இரவுகளையும்
நான்
விழுங்கினேன்;
ஆனால்
உனைப் பார்க்காத
ஞாயிறு இரவு
என்னை
விழுங்கியது இன்றுதான்!
இந்த நாள்
என் உயிரின்
முக்கால் பாகத்தை
உறிந்து விட்டது;
ஏ ஞாயிறே!
என் ஒவ்வொரு நாளும்
என்னவளுடன்
இருக்கும் போது
அவள் இல்லாத
நீ மட்டும் எதற்கு?
மரணம் வரைக்கும் சென்ற நான்
இன்னொரு ஜனனம் காண்பது போல
ஞாயிறே நீ போய் விடு....!
என்னவளை என்னுடன்
சேர்த்து விடு...!
இனியவளே!
பொழுது சாய சாய
உன் நினைவு
என் நிழலாக! 


கவிஞன்

இனியவளே!
விழிக்காத
இரவு தந்த
விழித்த
விண்மீன்களும்,
விழித்த
பொழுது தந்த
விழி சாயாத
சூரியனும்,
சோலையின்
வரிகளுக்கு
தென்றலின்
இசையை சேர்த்து
பாடும் குயில்களும்,
தனிமையில்
கவிப்பாடும்
என்னைப் பார்த்து
சிரிக்கும்....!
என்னுடன்
இல்லாமல்
நினைவாக
இருக்கும்
உன்
காதலுடன்
கவிப்பாடுவேன்
என்
நினைவிருக்கும் வரை....! 


மொழி

இனியவளே!
காற்றின் 
மொழியை அறிந்தேன்
உனக்கு தகவல் சொல்ல!
கிளியின்
மொழியை அறிந்தேன்
உனக்கு 
தூது சொல்ல!
தமிழ்
மொழியை அறிந்தேன்
உனக்கு
காதல் சொல்ல! 


சுகம்







இனியவளே!
காற்று
தரும்
மென்மையை விட
நீ
தரும்
காதல் சுகமானது!

நினைவு

இனியவளே!
நீ என்னை
பார்க்கா விட்டாலும்
நீ என்னிடம்
பேசா விட்டாலும்
நினைக்கிறாயே!
நினைவு மட்டும் போதும்...!
என்னிதயத்தை
நினைக்க செய்வது
நீதானே!
நினைப்பதை
முடித்து விடு!!
முடியாது என்றால்
மூன்று ஜென்மம்
கடன் வாங்கினாலும்
வாழ முடியாது...!?
உன்னால் முடியும்
என்றுதானே
நானும் நினைத்தேன்!
முடியாது என்றால்
நான் முடிப்பேன்
நீ சொல்வதை!!!


இயற்கை நியதி

இனியவளே!
ஆண்டவனே
என்னைக் கேட்டாலும்
கொடுக்க மாட்டேன் என்றாயே!
உனக்கு தெரியுமா?
சூரியனிடமிருந்து
வெளிச்சத்தையும்!
நிலாவிடமிருந்து
பொலிவையும்!
ரோஜாவிடமிருந்து
புன்னகையையும்!
தென்றலிடமிருந்து
இதத்தையும்!
பிரிக்க முடியாது;
அதுப்போல
உன்னிடமிருந்து என்னையும்
பிரிக்க முடியாது!
மாற்றங்கள் நிறைந்த
வாழ்க்கைதான்....!
இயற்க்கையை மாற்ற முடியாதே!
உன்னிடமிருந்து என்னை
யாராலும் பிரிக்க முடியாது!!!


காத்திருப்பு

இனியவளே!
சூரியனும்
அணுகுண்டாக மாறி
வெப்பம் உமிழ்ந்தான்!
தென்றலும்
திராவகமாக மாறி
தோலை உரித்தது!
அதிசயம் போல
நொடி பொழுதும்
மாறாமல்
என்னை வதைத்தது!
அதெப்படி
உனக்கு காத்திருக்கும்
நரகப் பொழுது மட்டும்
இவ்வாறு எனக்கு தெரியுது!
ஆனால்
காத்திருந்த கண்கள்
உனை காணாதப் பொழுது
தன்னையே
குருடாக்கிக் கொள்ள
முயற்ச்சிக்குது! 


நிரந்தரம்


இனியவளே!
பிரிவு நிரந்தரமல்ல
உண்மைதான்....!
சில சமயம்
பிரிவு
விரோதியாக
மாறி விடும்!
சில சமயம்
பிரிவு
சுகத்தைத் தரும்!
பிரிவின் முடிவில்
உன்னை
சந்திப்பது என்றால்,
சாவின் விளிம்பில் நின்ற
எனக்கு
உயிர்ப்பிச்சை அளிப்பது
போலத் தோன்றும்!!!
ஆனால்
பிரிவு நிரந்தரமானால்
என்னிதயம்
உன் நினைவை
நினைத்துக் கொண்டே
துடிப்பை நிறுத்தும்!!!

முட்டாள்

இனியவளே!
புது வருடம் பிறந்தாலும்
புத்துணர்ச்சி தரும்
உன்னுடைய வாழ்த்தை
எதிர்பார்த்தேன்!
பிறந்த தினமாக
இருந்தாலும்
சூரியனுக்கு முன்
உன்னுடைய வாழ்த்தை
எதிர்பார்த்தேன்!
தொழில் தொடங்கினாலும்
தோள் கொடுக்கும்
தோழி
உன்னுடைய வாழ்த்தை
எதிர்பார்த்தேன்!
அதுப்போல
முட்டாள்களின் தினமான
இன்று (ஏப்ரல்1)
உன்னிடம் மட்டும்
ஏமாற நினைத்தேன்!
கண்டிப்பாக
முட்டாளாக்கி விட்டாய்!
தொலைபேசியில்
பேசுவாய் என்று
ஏமாந்தேன்....!
ஆனால்
வாழ்க்கை முழுவதும்
முட்டாளாக்கி விடாதே!


முடிவு

இனியவளே!
சுற்றும் சூரியனும்
ஒரு நாள்
ஒரு நொடி நிற்கும்!
வற்றாத ஆறும்
வடிந்த பின்
கடலில் கலக்கும்!
பிறக்கும்
ஒவ்வோரு வருடமும்
டிசம்பரில் முடியும்!
சொல்ல முடியாத
சோகமும்
அழுகையில் முடியும்!
சில்லிடும் தென்றலும்
சில சமயம்
குளிர்மையில் முடியும்!
அமைதியான இசையும்
அருமையான
ஆர்பாட்டமாக மாறலாம்!
எதுவாகயிருந்தாலும்
முடிவு தெரியும்....!
ஆனால்
என் முடிவு....?!
உன் முடிவுதான்! 


ஆசை

இனியவளே!
உன் விரல் பிடித்து
வீதியில் நடக்க வேண்டும்;
தோளோடு தோள் சாய்ந்து
சலிக்காமல் கவிதை
உன்னிடம் சொல்ல வேண்டும்;
நான் கொடுத்த
ஒற்றை ரோஜா
உன் கூந்தலில் ஏற வேண்டும்;
அந்தி வானத்தில்
நீயும் நானும்
இரத்த சூரியனை ரசிக்க வேண்டும்;
எண்ணி எண்ணி கலைத்து
விடப்பட்ட விண்மீனை
நீ சொல்லி
திரும்ப எண்ண வேண்டும்;
வானத்தின்
ஏழு வண்ண் ஓவியமாம்
வானவில்லை
நானும் நீயும் ரசிக்க வேண்டும்;
காலையில்
என் விழி விழிக்கும் போது
உன் விழி இருக்க வேண்டும்
என்றெல்லாம்
ஆசைப்பட்டேன்;
ஆனால்
இன்று
பேசினால் மட்டும் போதுமே! 


கல்லறை

இனியவளே!
சூரியன்
நிலாவின் நினைவோடு
ஊரைச் சுற்றுவது போல
உன் நினைவோடு
நாட்க்களை கிழித்து
ஊரைச் சுற்றும் போது
பலருக்கு அறிமுகம் ஆனேன்;
இருந்தாலும்
என்னை எனக்கு
அறிமுகம் செய்தது
உன் விழிதானே!
உன்னால்தானே
நானும் வாழ
வாழ்க்கைக்கு விண்ணப்பம் செய்தேன்!
எனக்கே எனக்கு
என்னை பிடிக்காதப் பொழுது
உனை விரும்பிய மனம்
தினம் உனை நினைக்காவிடின்
கல்லறைதான்
என்னின்
அரண்மனை........!


நரக வேதனை

இனியவளே!
காலை கதிரவன்
கண் விழித்தாலும்
என் கண்
விழிக்க மறுக்குது!
என் இராஜ்யத்தின்
சூரியன்
நீதான் என்னுடன் இல்லையே!
என் தொலைந்த முகவரியை
தேடி பார்த்தேன்;
உன்னிதயம்தான்
அதுவென்று
உன் கண்களை
பார்த்த பின் தெரிந்தது!
முகவரிக்கு அடையாளமாக
உன் கண்கள்!!!
நீ
என்னுடன் இல்லாத
தினங்களில்
நரகம்
என்னை குத்தகைக்கு
எடுத்து விட்டது....
உனை பிரிந்தது
கண நேரமாக இருந்தாலும்
நரக வேதனைதான்; 


காதல் ஞானம்

இனியவளே!
என்றோ ஒரு நாள்
நாமிருவரும்
சந்தித்தால்
பேருந்தில்
இறங்கும் இடம்
மறந்து
இறக்கி விடப்படுகிறேன்....!
சுற்றி நடப்பது
தெரியாமல்,
பொசுக்கென்று
பூகம்பமே வந்தாலும்
அறியாமல்,
உன்னை
பார்த்தவாறு இருக்கிறேன்....!
கண்களில்
என்னை
ஆட்டிப் படைக்கும்
ஒளிக்க்ற்றை கொண்டுள்ளாயா?
விஞ்ஞானம் தெரிந்திருந்தால்
அறிந்திருப்பேன்;
காதல் ஞானத்தை கொண்டுள்ளதால்
காதலிக்கிறேன்....! 


பிடிவாதம்

இனியவளே!
சின்னதொரு பிரிவு
ஆடும் ஆட்டத்தையே
தாங்க முடியவில்லையே!
முடிவு தெரியாமல்
ஆடும் ஆட்டத்தை
நினைத்தால்
உயிர் மொத்தமும்
வாயின் வழியாக
எட்டிப் பார்க்குது!
தன்னந்தனியே
நான் நடக்கையில்,
"ஒரு வேளை
நீயில்லாத முடிவென்றால்"
என்னுயிர்க்கு கடைசியாக
இதயம் அடிக்கும்
அலாரமும்
துல்லியமாக கேட்குது!
நம்பிக்கை உள்ளதடி...!
என் உணர்வுகள்
உனை எட்டியதென்றால்,
உன் பிடிவாதத்தை
கை விடுவாய் என்று!


திரைப்படம்

இனியவளே!
நீயில்லாத
வாழ்க்கையே
எனக்கு
வேண்டாம் என்றேன்.
"அதுவெல்லாம்
வெறும் வார்த்தைதான்....
எல்லோரும் இப்படிதான்"
என்று கூறினாள்
உன் தோழி!
சமீபத்திய திரைபடம்
பார்த்து விட்டு
நிஜ வாழ்க்கையையும்
திரை வாழ்க்கையையும்
ஒப்பிட்டுள்ளாள்;
இருக்கட்டும்....
நீ கிடைக்காமல்
நான் இறந்த பிறகாவது
அவளுக்கு தெரியட்டும்
"என்னுயிர் நீதான்" என்று! 


வாழ்க்கை துணை

இனியவளே!
காலைப் பொழுதில்
கண் விழிக்கும் முன்னே
கதிரவனாய் வருகிறாய்!
தனிமையில் நானிருந்தால்
தவிப்பை போக்க
தென்றலாய் வருகிறாய்!
தோல்விகளில் தொலைந்த பொழுது
தோள் கொடுக்க
தோழியாய் வருகிறாய்!
கவலைகளில் கழுத்து வரை
புதைந்திருந்த பொழுதும்
காக்க வருகிறாய்!
மாலைப் பொழுதில்
உன் நினைவில் மயங்கியிருந்தால்
நிலவாக வருகிறாய்!
எல்லையில்லாமல் எவ்விடம்
நான் சென்றாலும்
நிழலாய் வருகிறாய்!
வாழ்க்கையின் அர்த்தத்தை
புரிய வைக்க!
என்னுள் பாதியாக!
எப்பொழுது வருவாய்? 


நீ வருவாயா?

இனியவளே!
முள்ளும் ரோஜாவும்
சூரியனும் நிலாவும்
தென்றலும் சோலையும் என்று
முரண்பட்டவைகள்
ஒன்றாய் இருக்க!
மனம் ஒன்றான
நாம்
எப்போழுது சேருவோம் 
நம்பிக்கை
என்னைத் தேற்றியது
நீ
என்னுடன் இருந்தால்
''சகலத்தையும் வெல்லுவேனாம்!''
உண்மைதானே
நினைத்ததை முடிக்க
நினைக்காததையும் முடிக்க
தோல்விக்கு தோள் கொடுக்க
வெற்றிக்கு வழிக்காட்ட
வாழ்க்கைக்கு ஒளியூட்ட
நீ வேண்டும்!
வருவாயா....?
வருவாய். 


பொக்கிஷம்


இனியவளே!
நீ
வெட்டி எறிந்த
நகத்துண்டு
பிறைத் துண்டாக ஒளிர,
உன்
பார்வைப்பட்டு
உடைந்த
கண்ணாடி சில்லுகள்
விண்மீங்களாய் மின்ன,
உன்
தொடுதலை
உணர்த்தும்
தென்றல்
என்னை முத்தமிட,
என்னுடன்
நீயில்லாத நேரத்தில்
உன் நினைவை
நினைத்து
கவிதை எழுதுவேன்
என்
நினைவிருக்கும் வரை....

பயணம்

இனியவளே!
மனம் விட்டு பேச
உன் தோள் தேடினேன்?
கவலைகளை மறக்க
உன் மடி தேடினேன்?
தோல்விகளை தொலைக்க
உன் ஆதரவு தேடினேன்?
அதுவெல்லாம் இருக்கட்டும்!
இன்றாவது
என்னிடம் பேசுவாயா?
உன் நினைவுகளெல்லாம்
என் நிழலாக!
நாம் சந்தித்த நாட்களெல்லாம்
சிந்தனையில் ஓட!
என் நினைவெல்லாம்
உன்னை பற்றியே
நினைக்க!
முடிவெடுத்தேன்
உன்னைப் பார்க்க!
உன்னை நோக்கிய
என் பயணம் ஆரம்பம்....! 


சுவாசம்


இனியவளே!
யோசித்தால்
கவிதை வரும்
உண்மைதான்...
கவிதை எழுத
யோசித்தேன்...
நேசிக்கும்
உன்னைப் பற்றியே
யோசிப்பதால்
கவிதையிலும்
உன்னை
சுவாசிக்கிறேன்!
என் கவிதையை
வாசிக்கும்
உனக்கு தெரியுமா?
கவிதையின்
வாசம் மட்டுமல்ல
என் சுவாசமும்
நீதான் என்பது!
சுவாசம் இல்லையென்றால்
என் வாசமே
மண்ணிற் இராது!?

திங்கள், 25 ஜூலை, 2011

குறிஞ்சி பூ

இனியவளே!
தினம் தினம்
வகுப்பிலும்!
காலை சூரியன்
மஞ்சள்த் தேய்த்துக்
குளிப்பதற்கு முன்பே
கோலம் போடுகையிலும்!
சுட்டெரிக்கும்
சூரியன் உச்சிக்கு
வந்தாலும்
அவனை நிலவாக
கற்பனை செய்து
மொட்டை மாடி வெய்யிலிலும்
தன் காதலியை
பார்க்கும் நண்பன்,
சொந்தம் பார்க்க
சென்றவளை
காண முடியவில்லை
இன்று என்றான்!
அவனுக்கு தெரியுமா?
குறிஞ்சி பூவாக
நாம் சந்திப்பது! 


காலம்


இனியவளே!
காலம்
என்னைத்
துரத்தும்!
நானும்
காலத்தைத்
துரத்துவேன்!
மராத்தான் ஓட்டமாக
காலமும்
நானும் ஓடுவோம்!
முடிவு
தெரிகிறதோ இல்லையோ
ஓடுவதில்
குறியாக இருந்தோம்!
காலத்திற்கு நானும்
எனக்கு காலமும்
ஜென்ம விரோதிப் போல
துரத்துவோம்!
காலம் ஓடுவதை
நிறுத்தி விட்டது;
நானேத் துரத்தினாலும்
ஓடவில்லை......
நான் உனக்காக
காத்திருக்கும் வேளையில்!

கனவு விஞ்ஞானி


இனியவளே!
யாரும் இல்லாத
ஓடத்தில்
நான் பயணித்தேன்
செவ்வாயை நோக்கிய
பயணம்!
பயணத்தின் முடிவில்
செவ்வாய் கோளில்
நீரை கண்டறிந்தேன்!
தினம் தினம்
செய்திகளில்
என்னைப் பற்றி!
உலகம் தன் குடுமியில்
என்னைத் தூக்கி வைத்து
பாராட்டியது!
இதுப்போல
பல கனவுகளும்
உனக்காக
நான்
காத்திருக்கும் நேரத்தில்
விசாரித்து விட்டு
சென்றன என்னை! 


வழிக்காட்டி

இனியவளே!
சூரியனாக இருந்து
உயிர் தந்தாய்!
நிலவாய் இருந்து
பொலிவு தந்தாய்!
சோலையாக இருந்து
தென்றல் தந்தாய்!
தமிழாக இருந்து
கவிதை தந்தாய்!
தனிமையாக இருந்து
அமைதி தந்தாய்!
இனியவளாக இருந்து
வாழ்க்கை தந்தாய்!
இதுப்போல
நான் கூறினாலும்
பிறப்பின் உணர்வை
வாழ்க்கையின் அர்த்தத்தை
வெற்றியின் ரகசியத்தை
சொன்ன
உன்னை
நான் மறப்பேனா?
என்
நினைவிருக்கும் வரை!


முதல் சந்தோசம்

இனியவளே!
கவிதை எழுத
வார்த்தைகளை தேடினேன்?
வராத வார்த்தைகள்
உன் பேச்சில்தான்
மறைந்திருந்தனவா?
உன்னிடம்
பேசியவுடன்தான்
கவிதையும் தானாக
காதல் பேசுது!
நினைவுகளாய் இருந்த
நம்
குறிஞ்சி சந்திப்புகள்
மீண்டும்
பூக்கப் போகிறது;
பனிக்குடம் உடைந்து
நினைவு தெரிந்த
நாள் முதல்
நான்
சந்திக்காத சந்தோசம்
இன்றுதான் சந்தித்தேன்!
உன்னிடம் பேசியப்பிறகு! 


தொலைப்பேசி


இனியவளே!
நம்முடன்
மட்டும்
பிரச்சினைகள்
கூட்டணி அமைத்து விட்டதா?
காலங்கள்
கடப்பது தெரியாமல்
பூங்காவில்
நேரத்தை கழித்தோமா?
மற்றவர்கள்
பார்ப்பது தெரியாமல்
தோளோடு தோள் சாய்ந்திருந்தோமா?
எண்ணி எண்ணி
பத்து நாள்
சுத்தியிருப்போமா?
உணர்வுக்கு
உயிர்க் கொடுத்து
தொலைப்பேசியில்தானே பேசினோம்!
இதுவும் கூட
தொலைப்பேசிக்கும் பிடிக்கவில்லையா?
சில நாட்க்களாக
உன்னிடம்
தொலைப்பேசியிலும் பேச முடியவில்லையே!

தன்னம்பிக்கை

இனியவளே!
மனதில்
கவலை ஆட்சி புரிய
கண்களில்
துக்கம் திரையிட
என் கையை
உன் கையோடு
இணைத்தாயே!
நிலவை தொட்ட உணர்வு
தென்றலை தொட்ட உணர்வு
பிறப்பின் அர்த்தம் உணர்ந்த உணர்வென்று
நான் கூறினாலும்
கையைப் பிடித்தாயே
பாசத்தோடு...!
அதிலிருந்து
உணர்ந்தேன்
எதையும் சாதிப்பேன்
நீ
என்னுடன் இருந்தால்...!


நினைவு

இனியவளே!
தெரியாத தேசம் சென்ற
தென்றலும்
தேடி வந்தது;
வழக்கம் பொல வானத்தில்
விடியல் வந்தாலும்
உன் முகம் கண்டவுடன்
என் வானம் விடிந்தது....
மணிக்கணக்கில்
நடந்த
நம் சந்திப்புகள்
மனக்கண்க்கில்
தெரிந்தது...
சத்தமில்லாமல்
சந்தோசம்
என்னை தேடியது...!
இவையெல்லாம்
தொடர
நீ
என்னுடன் இருப்பாயா?


வியாழன், 21 ஜூலை, 2011

உறவு

இனியவளே!
தேடிப்பார்த்தேன்
தென்றலையும்
காண வில்லை....
வருமென்று
நினைத்தேன்
வசந்தமும்
வரவில்லை....
எழுதலாம் என்று
நினைத்தேன்
கவிதையும்
வரவில்லை....
தெரிந்து விட்டது
என்னுடன் நீயில்லையென்று!
தென்றலாக
இதம் தரவில்லையென்றாலும்
வசந்தமாக
வாசம் தரவில்லையென்றாலும்
இனியவளாகி
என்
உயிர் தருவாயா?


ஞாயிறு, 17 ஜூலை, 2011

பிரிவு

இனியவளே!
சின்னதொரு
பிரிவை தந்தாய்...?
ஏனோ தெரியவில்லை
உன் நினைவு மட்டும்
பிரியவில்லை.....?
மறுத்த நினைவு
பிரிய நினைத்த
உனை
ஞாபகப்படுத்த....
வருந்திய இதயம்
விரும்பிய
உன் நினைவை
அசைப்போட்டது!
உன் நிழலை
என்னிடமிருந்து
பிரிக்க நினைத்தாயே!
உன் நினைவை
மனதிலிருந்து
பிரிக்க முடியுமா?
இதயத்தை கிழித்து......!

எதிர்ப்பார்ப்பு

இனியவளே!
என்னுடன்
நீயில்லாத
ஞாயிறு விடுமுறையே
வேண்டாம் என்றேன்!
நீ
நடைப் பயிலாத
கவிதையே
எழுத மாட்டேன் என்றேன்!
தோல்வி நேரத்தில்
தோள்க் கொடுக்க
நீயில்லை என்றால்
தோள்களே வேண்டாம் என்றேன்!
மடைத் திறந்த வெள்ளமாக
மகிழ்ச்சி வந்தாலும்
நீயில்லை என்றால்
அதுவும் வேண்டாம் என்றேன்
அது சரி!
நீயில்லாத வாழ்க்கை மட்டும் எதற்கு?

கனவு

இனியவளே!
மரங்களெல்லாம்
எதிர் திசையில்
ஓடுவதை
ஜன்னல் வழியே ரசிக்கும்
பயண நேரத்திலும்,
தமிழ் வார்த்தைகளை
இசையோடு கோர்த்து
பாடிக் கொண்டே ரசிக்கும்
இனிமை நேரத்திலும்,
முதல் உலக பெண்
வரைந்த கோலத்திலுள்ள
புள்ளிகளை அன்னாந்து ரசிக்கும்
இரவு நேரத்திலும்,
என்னுடன் இருந்தாயே!
ஓ.....!
கனவாக் கண்டேன்!
கனவிலாவது
என்னுடன் இருக்கிறாயே....!

பிறப்பு

இனியவளே!
சூரியன் தன்னையறியாமல்
ஊரைச் சுற்றுவதும் தெரியாமல்,
மனிதர்கள்
மணிக்கணக்கில்
மகிழ்வதும் தெரியாமல்,
பூக்களின்
மயக்கும்
நறுமணமும் தெரியாமல்,
தினங்கள்
நாட்களாக
பிறப்பதும் தெரியாமல்,
கவிதை எழுத
வார்த்தைகளும் தெரியாமல்......,
தெரிந்து விட்டது....!
நீ என்னுடன் இல்லை
என்பது மட்டும்.


சனி, 16 ஜூலை, 2011

வெளிச்சம்


இனியவளே!
கண்னில்
வலியிருந்தால்
கண்ணீர்க் காட்டி விடும்!
உன்னில்
காதலிருந்தால்
கண்ணில் காட்டி விடும்!
உன் பேச்சுக் கேட்காமல்
நான் பேச மறந்தேன்!
உலகம் உறங்கினாலும்
உள்ளம் உறங்கவில்லை...
சத்தமின்றி
தினங்கள் பிறப்பதுப் போல
நித்தம் செத்து பிறக்கிறேன்
உன் குரல் கேட்க்காமல்!
வழி தெரிய
விழி உள்ளதுப் போல
வாழ்க்கை வழி தெரிய
உன் விழி வேண்டுமே!
உன்னிதயத்தில்
தொலைந்த
என்னிதயத்தை
பத்திரமாக வைத்து கோள்.....!

காதல் கட்டுரை

இனியவளே!
காதலில்
ஜெயம் காண,
நான் எழுதிய
ஆராய்ச்சி கட்டுரைகள்
சில இதோ!
கட்டுரைக்கு
முற்றுரை இருக்கும்.
என் காதல் கட்டுரைக்கு
முற்று புள்ளி இல்லை.
தொடர்ப்புள்ளிதான்.
உன்னுடன் கூடிய
தொடர்ப்புள்ளி....
இனியவனின்
காதல் சோலையில்
மலரும்
கவிதை ரோஜாக்கள்
மத்தியில்
இனியவளின்
காதல் பயணங்கள்....