வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

புது வரலாறு

இனியவளே!
அணு அணுவாய்
அழிந்து
ஆழமாய்
காதலித்த
அம்பிகாவதி -அமராவதி...
மணிக்கணக்கில்
காதலித்து
மந்திரிக்கப் பட்டவர்களாய்
காதலித்த
லைலா-மஜ்னு...
சந்தித்த வேளையிலும்
காதல் செய்து
சடலங்களாகியும்
காதலித்த
சலீம்-அனார்க்கிளி...
என்று
தோல்வி கண்ட
வழிகாட்டிகளும் இருக்க,
பெண்ணுக்கு
அலட்சியம்
தேசிய குணம்
என்று தெரிந்தே
காதலித்தேன்
வரலாற்றில்
இடம் பிடிக்க...! 


9 கருத்துகள்:

  1. பெண்ணுக்கு
    அலட்சியம்
    தேசிய குணம்
    என்று தெரிந்தே
    காதலித்தேன்
    வரலாற்றில்
    இடம் பிடிக்க...//

    அலட்சியவாதிகள் காதலிகளாகும்போது காதலித்தவனின் ஆழம் காதலின் வரலாறு!

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. பெண்ணுக்கு
    அலட்சியம்
    தேசிய குணம்
    என்று தெரிந்தே
    காதலித்தேன்
    வரலாற்றில்
    இடம் பிடிக்க...//

    :)

    பதிலளிநீக்கு
  3. பிரியமுடன் பிரபு// நண்பா... படம் போட்டு ஆதரவு கேட்க வில்லை..... என் கவிதை பிடிக்க வில்லையென்றால் சொல்.....

    பதிலளிநீக்கு
  4. அருமை காதலை அற்புதமாக எடுத்து கூறுவது

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள இனியவரே,

    வாழ்த்துகள். வரலாற்றில் இடம்பிடிக்க வாழ்த்துகிறேன்... உங்கள் காதலும் உங்கள் வரிகளும்...

    பதிலளிநீக்கு

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..