வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பயம்

இனியவளே!
ரோஜாவே! ரோஜாவே!
என்னை
முள்ளால்க் குத்தி
குருதியை
சாயமாக
பூசிக் கொள்ளாதே!
வெண்ணிலவே! வெண்ணிலவே!
என்னை
பள்ளத்தில் தள்ளி
நீ
மட்டும்
மேகத்தில் சுத்தாதே!
தென்றலே! தென்றலே!
என்னை
காதலால் சுட்டு
நீ மட்டும்
இதமாய் இருக்காதே!
இனியவளே! இனியவளே!
என்னை
அலட்சியமாக
மறந்து
ஏமாந்து போகாதே! 



0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..