இனியவளே!
சூரியனும்
நிலவும்
ஊடல் செய்யும்
திரு நாள் இல்லை என்றாலும்;
பூவை
வண்டு
கற்பழிக்கும்
ஒரு நாள் இல்லை என்றாலும்;
சோலையை
தென்றல்
வெறுக்கும்
கோடை நாள் இல்லை என்றாலும்;
இயற்கை
அழிவுதான்
என்று,
மறு நாள் கூறும் அறிவியல் கண்டுபிடிப்பு;
என்னை
நீ
மறப்பதற்கு காரணம்
இந்நாள் கூறுவேன்
உன் பெற்றோரின் கண்டிப்பு!!!
0 விமர்சனம்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..