ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

பச்சை மர ஆணி

இனியவளே!
நாம்
காதலித்த நாட்கள்
செல்லரித்து போக...
உன்னை
வர்ணித்த கவிதையில்
சொற்கள் பிரிந்து விழ...
நீ
உதடு சேர்த்து கொடுத்த
முத்தம் காய்ந்து போக....
நீ
தொட்ட இடங்களில்
வியர்வை வந்து அழிக்க...
நாம்
சந்தித்த நாட்கள் எல்லாம்
சத்தமில்லாமல் மறைய...
நீ
காதலித்த
என்னை
மணிக்கணக்கில் மறந்து போக...
ஆனால்
பச்சை மர ஆணி போல்
மனதில்
பதிந்த
உன் நினைவு மட்டும்
இன்னும் மறையாமல்....


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..