ஞாயிறு, 31 ஜூலை, 2011

நிரந்தரம்


இனியவளே!
பிரிவு நிரந்தரமல்ல
உண்மைதான்....!
சில சமயம்
பிரிவு
விரோதியாக
மாறி விடும்!
சில சமயம்
பிரிவு
சுகத்தைத் தரும்!
பிரிவின் முடிவில்
உன்னை
சந்திப்பது என்றால்,
சாவின் விளிம்பில் நின்ற
எனக்கு
உயிர்ப்பிச்சை அளிப்பது
போலத் தோன்றும்!!!
ஆனால்
பிரிவு நிரந்தரமானால்
என்னிதயம்
உன் நினைவை
நினைத்துக் கொண்டே
துடிப்பை நிறுத்தும்!!!

0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..