ஞாயிறு, 31 ஜூலை, 2011

காத்திருப்பு

இனியவளே!
சூரியனும்
அணுகுண்டாக மாறி
வெப்பம் உமிழ்ந்தான்!
தென்றலும்
திராவகமாக மாறி
தோலை உரித்தது!
அதிசயம் போல
நொடி பொழுதும்
மாறாமல்
என்னை வதைத்தது!
அதெப்படி
உனக்கு காத்திருக்கும்
நரகப் பொழுது மட்டும்
இவ்வாறு எனக்கு தெரியுது!
ஆனால்
காத்திருந்த கண்கள்
உனை காணாதப் பொழுது
தன்னையே
குருடாக்கிக் கொள்ள
முயற்ச்சிக்குது! 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..