திங்கள், 25 ஜூலை, 2011

குறிஞ்சி பூ

இனியவளே!
தினம் தினம்
வகுப்பிலும்!
காலை சூரியன்
மஞ்சள்த் தேய்த்துக்
குளிப்பதற்கு முன்பே
கோலம் போடுகையிலும்!
சுட்டெரிக்கும்
சூரியன் உச்சிக்கு
வந்தாலும்
அவனை நிலவாக
கற்பனை செய்து
மொட்டை மாடி வெய்யிலிலும்
தன் காதலியை
பார்க்கும் நண்பன்,
சொந்தம் பார்க்க
சென்றவளை
காண முடியவில்லை
இன்று என்றான்!
அவனுக்கு தெரியுமா?
குறிஞ்சி பூவாக
நாம் சந்திப்பது! 


3 கருத்துகள்:

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..