திங்கள், 25 ஜூலை, 2011

முதல் சந்தோசம்

இனியவளே!
கவிதை எழுத
வார்த்தைகளை தேடினேன்?
வராத வார்த்தைகள்
உன் பேச்சில்தான்
மறைந்திருந்தனவா?
உன்னிடம்
பேசியவுடன்தான்
கவிதையும் தானாக
காதல் பேசுது!
நினைவுகளாய் இருந்த
நம்
குறிஞ்சி சந்திப்புகள்
மீண்டும்
பூக்கப் போகிறது;
பனிக்குடம் உடைந்து
நினைவு தெரிந்த
நாள் முதல்
நான்
சந்திக்காத சந்தோசம்
இன்றுதான் சந்தித்தேன்!
உன்னிடம் பேசியப்பிறகு! 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..