ஞாயிறு, 31 ஜூலை, 2011

வாழ்க்கை துணை

இனியவளே!
காலைப் பொழுதில்
கண் விழிக்கும் முன்னே
கதிரவனாய் வருகிறாய்!
தனிமையில் நானிருந்தால்
தவிப்பை போக்க
தென்றலாய் வருகிறாய்!
தோல்விகளில் தொலைந்த பொழுது
தோள் கொடுக்க
தோழியாய் வருகிறாய்!
கவலைகளில் கழுத்து வரை
புதைந்திருந்த பொழுதும்
காக்க வருகிறாய்!
மாலைப் பொழுதில்
உன் நினைவில் மயங்கியிருந்தால்
நிலவாக வருகிறாய்!
எல்லையில்லாமல் எவ்விடம்
நான் சென்றாலும்
நிழலாய் வருகிறாய்!
வாழ்க்கையின் அர்த்தத்தை
புரிய வைக்க!
என்னுள் பாதியாக!
எப்பொழுது வருவாய்? 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..