ஞாயிறு, 31 ஜூலை, 2011

நரக வேதனை

இனியவளே!
காலை கதிரவன்
கண் விழித்தாலும்
என் கண்
விழிக்க மறுக்குது!
என் இராஜ்யத்தின்
சூரியன்
நீதான் என்னுடன் இல்லையே!
என் தொலைந்த முகவரியை
தேடி பார்த்தேன்;
உன்னிதயம்தான்
அதுவென்று
உன் கண்களை
பார்த்த பின் தெரிந்தது!
முகவரிக்கு அடையாளமாக
உன் கண்கள்!!!
நீ
என்னுடன் இல்லாத
தினங்களில்
நரகம்
என்னை குத்தகைக்கு
எடுத்து விட்டது....
உனை பிரிந்தது
கண நேரமாக இருந்தாலும்
நரக வேதனைதான்; 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..