இனியவளே!
தேடிப்பார்த்தேன்
தென்றலையும்
காண வில்லை....
வருமென்று
நினைத்தேன்
வசந்தமும்
வரவில்லை....
எழுதலாம் என்று
நினைத்தேன்
கவிதையும்
வரவில்லை....
தெரிந்து விட்டது
என்னுடன் நீயில்லையென்று!
தென்றலாக
இதம் தரவில்லையென்றாலும்
வசந்தமாக
வாசம் தரவில்லையென்றாலும்
இனியவளாகி
என்
உயிர் தருவாயா?
0 விமர்சனம்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..