ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஆசை

இனியவளே!
உன் விரல் பிடித்து
வீதியில் நடக்க வேண்டும்;
தோளோடு தோள் சாய்ந்து
சலிக்காமல் கவிதை
உன்னிடம் சொல்ல வேண்டும்;
நான் கொடுத்த
ஒற்றை ரோஜா
உன் கூந்தலில் ஏற வேண்டும்;
அந்தி வானத்தில்
நீயும் நானும்
இரத்த சூரியனை ரசிக்க வேண்டும்;
எண்ணி எண்ணி கலைத்து
விடப்பட்ட விண்மீனை
நீ சொல்லி
திரும்ப எண்ண வேண்டும்;
வானத்தின்
ஏழு வண்ண் ஓவியமாம்
வானவில்லை
நானும் நீயும் ரசிக்க வேண்டும்;
காலையில்
என் விழி விழிக்கும் போது
உன் விழி இருக்க வேண்டும்
என்றெல்லாம்
ஆசைப்பட்டேன்;
ஆனால்
இன்று
பேசினால் மட்டும் போதுமே! 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..