ஞாயிறு, 31 ஜூலை, 2011

இயற்கை நியதி

இனியவளே!
ஆண்டவனே
என்னைக் கேட்டாலும்
கொடுக்க மாட்டேன் என்றாயே!
உனக்கு தெரியுமா?
சூரியனிடமிருந்து
வெளிச்சத்தையும்!
நிலாவிடமிருந்து
பொலிவையும்!
ரோஜாவிடமிருந்து
புன்னகையையும்!
தென்றலிடமிருந்து
இதத்தையும்!
பிரிக்க முடியாது;
அதுப்போல
உன்னிடமிருந்து என்னையும்
பிரிக்க முடியாது!
மாற்றங்கள் நிறைந்த
வாழ்க்கைதான்....!
இயற்க்கையை மாற்ற முடியாதே!
உன்னிடமிருந்து என்னை
யாராலும் பிரிக்க முடியாது!!!


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..