ஞாயிறு, 31 ஜூலை, 2011

கவிஞன்

இனியவளே!
விழிக்காத
இரவு தந்த
விழித்த
விண்மீன்களும்,
விழித்த
பொழுது தந்த
விழி சாயாத
சூரியனும்,
சோலையின்
வரிகளுக்கு
தென்றலின்
இசையை சேர்த்து
பாடும் குயில்களும்,
தனிமையில்
கவிப்பாடும்
என்னைப் பார்த்து
சிரிக்கும்....!
என்னுடன்
இல்லாமல்
நினைவாக
இருக்கும்
உன்
காதலுடன்
கவிப்பாடுவேன்
என்
நினைவிருக்கும் வரை....! 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..