திங்கள், 25 ஜூலை, 2011

தொலைப்பேசி


இனியவளே!
நம்முடன்
மட்டும்
பிரச்சினைகள்
கூட்டணி அமைத்து விட்டதா?
காலங்கள்
கடப்பது தெரியாமல்
பூங்காவில்
நேரத்தை கழித்தோமா?
மற்றவர்கள்
பார்ப்பது தெரியாமல்
தோளோடு தோள் சாய்ந்திருந்தோமா?
எண்ணி எண்ணி
பத்து நாள்
சுத்தியிருப்போமா?
உணர்வுக்கு
உயிர்க் கொடுத்து
தொலைப்பேசியில்தானே பேசினோம்!
இதுவும் கூட
தொலைப்பேசிக்கும் பிடிக்கவில்லையா?
சில நாட்க்களாக
உன்னிடம்
தொலைப்பேசியிலும் பேச முடியவில்லையே!

0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..