ஞாயிறு, 31 ஜூலை, 2011

நீ வருவாயா?

இனியவளே!
முள்ளும் ரோஜாவும்
சூரியனும் நிலாவும்
தென்றலும் சோலையும் என்று
முரண்பட்டவைகள்
ஒன்றாய் இருக்க!
மனம் ஒன்றான
நாம்
எப்போழுது சேருவோம் 
நம்பிக்கை
என்னைத் தேற்றியது
நீ
என்னுடன் இருந்தால்
''சகலத்தையும் வெல்லுவேனாம்!''
உண்மைதானே
நினைத்ததை முடிக்க
நினைக்காததையும் முடிக்க
தோல்விக்கு தோள் கொடுக்க
வெற்றிக்கு வழிக்காட்ட
வாழ்க்கைக்கு ஒளியூட்ட
நீ வேண்டும்!
வருவாயா....?
வருவாய். 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..